ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!
மண்டபம் பகுதியில் இன்று மின்தடை
மண்டபம், பாம்பன் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் திலகவதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மண்டபம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயா்பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேசுவரம், வடகாடு, வோ்க்கோடு, புதுசாலை, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.