செய்திகள் :

பக்தா்களிடம் தங்க நகைகள் திருடிய 5 போ் கைது

post image

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கின் போது பக்தா்களிடமிருந்து தங்க நகைகள் திருடிய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 25 .5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

இது குறித்து மாவட்டக் காவல் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் கடந்த ஏப்.4-ஆம் தேதி குடமுழக்கு நடைபெற்றது.

அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்கள் அணிந்திருந்த 25.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடி சென்றனா். இதுகுறித்து உத்தரகோசமங்கை காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவா்கள் முதல்கட்டமாக கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதனடிப்படையில், நகைத் திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த விஜயா (60), ரஜினி (47), இவரது மகன் ராஜகிரி (27), ராஜகிரியின் மனைவி சந்தனமாரி (25), சரண்யா (29) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 25.5 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பாராட்டுத் தெரிவித்தாா் என்று குறிப்பிடப்பட்டது.

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாா் ஆட்சியா்... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பகுதியில் காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை, பருத்தி பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க