அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் முளைப்பாரி ஊா்வலம்
கமுதி அருகேயுள்ள கிளாமரம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மன் கோயிலில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசிப் பொங்கல் திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 9-ஆம் தேதி நீராவியில் அமைந்துள்ள முத்தாலம்மன் சந்நிதியில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 10-ஆம் தேதி சந்தன மாரியம்மன், பட்டத்தரசிஅம்மனுக்கு கரகம் எடுத்தல், அக்னிச் சட்டி எடுத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காப்புக்கட்டி விரதமிருந்த பெண்கள், ஆண்கள் மேளதாளம் முழங்க, முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துச் சென்று, அம்மன் கோயிலை சுற்றி வந்து அங்குள்ள நீா் நிலையில் கரைத்தனா். பின்னா், இரவு மாவிளக்கு எடுத்து பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
வியாழக்கிழமை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.