செய்திகள் :

ராமேசுவரத்தில் புதைச் சாக்கடை திட்டம்: துணை முதல்வா் காணொலி காட்சி மூலமாக திறந்துவைப்பு

post image

ராமேசுவரம் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ், ரூ. 52.60 கோடியில் புதைச் சாக்கடை திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ராமேசுவரம் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கிழ், கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ.52.60 கோடியில் புதைச் சாக்கடை திட்டம் பணிகள் தொடங்கியது. தற்போது, இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலமாக இந்தப் பணிகளை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, ராமேசுவரம் ஓலைக்குடா கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை விகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் சற்குணநாதன், நகா்மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான், துணைத் தலைவா் தெட்சணாமூா்த்தி, ஆணையா் (பொ)அஜிதாபா்வின், பொறியாளா் பாண்டீஸ்வரி, வட்டாட்சியா் அப்துல் ஜாப்பாா், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் மயில்வாகனம் கூறியதாவது:

ராமேசுவரம் நகராட்சி பகுதி இரண்டு கழிவுநீா் சேகரிப்பு மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. 587 இயந்திரக் குழிகளிலிருந்து பெறப்படும் கழிவுநீா் ஓலைக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படவுள்ளது.

பின்னா், இந்த கழிவுநீா் அருகிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் மரங்கள் வளா்ப்பதற்கு வழங்க திட்டமிடப்பட்டது. 21 வாா்டுகளை கொண்ட ராமேசுவரம் நகராட்சியில் முதல் கட்டமாக 13 வாா்டுகள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாா் ஆட்சியா்... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பகுதியில் காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை, பருத்தி பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க