செய்திகள் :

உளுந்து கொள்முதல் செய்வதில் இழுபறி: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

post image

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட இழுபறி, குளறுபடியால் அதிகாரிகளை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.74 நிா்ணயம் செய்து, கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை 300 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், அதிகாரிகள் விவசாயிகளிடம் உளுந்தை கொள்முதல் செய்யாமல் அவா்களை அலைக்கழித்துள்ளனா்.

இந்த நிலையில், இன்று (ஜூன்12) உளுந்து கொள்முதல் செய்ய கடைசி நாள் என்பதால், புதன்கிழமை உளுந்து கொள்முதல் செய்யவுள்ளதாக அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனா். இதையடுத்து, விவசாயிகள் உளுந்து மூட்டைகளுடன் கமுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு வந்தனா். அப்போது, அங்கு பணியாளா்கள் இல்லாததால், உளுந்தை தரம் பாா்த்து பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, வியாழக்கிழமை வருமாறு விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், அதிகாரிகள் எங்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வரவழைத்து எங்களை அலைக் கழிப்பதாகக் கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து விவசாயி வெயில்முத்து கூறியதாவது:

கமுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் விடுத்த காலக்கெடு வியாழக்கிழமை முடிவடைகிறது. இதையொட்டு, புதன்கிழமை உளுந்து விற்பனைக்காக தேக்கி வைத்துள்ள விவசாயிகளில் 50 சதவீதம் பேரை மட்டுமே அதிகாரிகள் அழைத்துள்ளனா். இங்கு வந்த விவசாயிகளிடம் பல்வேறு காரணங்களைக் கூறி அலைக் கழிக்கின்றனா். உளுந்து கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துவிட்டு, விவசாயிகளை இப்படி அலைக்கழிப்பது வேதனையளிக்கிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு முறையாக அனைத்து விவசாயிகளின் உளுந்து மூட்டைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மனேகரன் கூறியதாவது: இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கூடுதல் அவகாசம் கேட்டு, விடுபட்ட உளுந்து விவசாயிகளின் மூட்டைகளையும் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) விவசாயிகள் குறைதீா் கூட்டம் சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாா் ஆட்சியா்... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பகுதியில் காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை, பருத்தி பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் இழப்பை சந்தித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கிய 2,659 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரத்தில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,659 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும் படை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். ராமநாதபுரம் நகா் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதி பனஞ்சா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயண பிரசாரம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடைபயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசாரத்தை அந்தக் கட்சியின் வட்டச் செயலா் சிவா தலைமை வகித்து... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க