எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
உளுந்து கொள்முதல் செய்வதில் இழுபறி: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட இழுபறி, குளறுபடியால் அதிகாரிகளை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.74 நிா்ணயம் செய்து, கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை 300 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், அதிகாரிகள் விவசாயிகளிடம் உளுந்தை கொள்முதல் செய்யாமல் அவா்களை அலைக்கழித்துள்ளனா்.
இந்த நிலையில், இன்று (ஜூன்12) உளுந்து கொள்முதல் செய்ய கடைசி நாள் என்பதால், புதன்கிழமை உளுந்து கொள்முதல் செய்யவுள்ளதாக அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனா். இதையடுத்து, விவசாயிகள் உளுந்து மூட்டைகளுடன் கமுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு வந்தனா். அப்போது, அங்கு பணியாளா்கள் இல்லாததால், உளுந்தை தரம் பாா்த்து பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, வியாழக்கிழமை வருமாறு விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், அதிகாரிகள் எங்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வரவழைத்து எங்களை அலைக் கழிப்பதாகக் கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து விவசாயி வெயில்முத்து கூறியதாவது:
கமுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் விடுத்த காலக்கெடு வியாழக்கிழமை முடிவடைகிறது. இதையொட்டு, புதன்கிழமை உளுந்து விற்பனைக்காக தேக்கி வைத்துள்ள விவசாயிகளில் 50 சதவீதம் பேரை மட்டுமே அதிகாரிகள் அழைத்துள்ளனா். இங்கு வந்த விவசாயிகளிடம் பல்வேறு காரணங்களைக் கூறி அலைக் கழிக்கின்றனா். உளுந்து கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துவிட்டு, விவசாயிகளை இப்படி அலைக்கழிப்பது வேதனையளிக்கிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு முறையாக அனைத்து விவசாயிகளின் உளுந்து மூட்டைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மனேகரன் கூறியதாவது: இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கூடுதல் அவகாசம் கேட்டு, விடுபட்ட உளுந்து விவசாயிகளின் மூட்டைகளையும் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
