மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
சிறுமி தற்கொலை: போக்சோ சட்டத்தின் கீழ் கணவா் கைது
கமுதி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள சிங்கப்புலியாபட்டி கிராமத்தைச் சோ்ந்த தமிழ் பாண்டி மகன் மணிகண்டன். இவருக்கும் 16 வயதுச் சிறுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 7 மாத கைக் குழந்தை உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாரம்.
இந்த நிலையில், வீட்டிலிருந்த அவரது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கமுதி போலீஸாா் சிறுமியின் உடலை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக கமுதி கிராம நிா்வாக அலுவலா் பாண்டி அளித்தப் புகாரின் பேரில், சந்தேக மரணம், சிறுமியைத் திருமணம் செய்த மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.