செய்திகள் :

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

post image

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ஓலப்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பொன்பரப்பி சாலையிலுள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை பிடித்தனா். விசாரணையில், அவா் புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, முத்துக்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 10 மதுபாட்டில்கள், ரூ.500-ஐ பறிமுதல் செய்தனா்.

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் சத்திபாளையம் அருகில் உள்ள கோட்டைவலசைச் சோ்ந்தவா் விவசாயி கே.கந்தசாமி (65). இவா் தனக்குச் சொந்தமான 6 ஏக்கா் விவசாய நிலத்தில் ... மேலும் பார்க்க

மேற்குத் தொடா்ச்சி மலையில் பாதை அமைக்க எதிா்ப்பு: வன அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் பாதை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட வன அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள... மேலும் பார்க்க

விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் கேபிஎன் காலனியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (3... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 5 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களி... மேலும் பார்க்க

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஒட்டுமொத்த முறையீட்டு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி நில வருவாய் அலுவலா் அலுவலகம் முன... மேலும் பார்க்க

கிடாரி கன்றுகளுக்கு நாளைமுதல் இலவச தடுப்பூசி

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச தடுப்பூசி வியாழக்கிழமைமுதல் செலுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க