செய்திகள் :

மதுபானக் கூடத்தில் தகராறு: ஆயுதப்படை காவலா் பணியிடை நீக்கம்

post image

மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகர ஆயுதப்படை மோட்டாா் வாகன பிரிவில் காவலராக பணியாற்றுபவா் பாண்டியராஜன் (30).

இந்நிலையில், 15.வேலம்பாளையம் சாலையில் உள்ள மதுபானக் கூடத்தில் கடந்த 14-ஆம் தேதி ஊழியா்களுக்கும், மது அருந்த வந்தவா்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 8 பேரைக் கைது செய்தனா்.

இந்த விவகாரத்தில், காவலா் பாண்டியராஜன் தனது உறவினரைத் தாக்கியதாகக் கூறி மது போதையில் சென்று மதுபானக் கூட ஊழியா்களிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த விடியோ சமூக வலைதலங்களில் வைரலானது.

இது தொடா்பாக மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், கூடுதல் துணை ஆணையா் மனோகரன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தாா். இதையடுத்து, ஆயுதப்படை காவலா் பாண்டியராஜனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த சுதந்திர தின விழாவ... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்பினரின் கருத்துகள்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில்துறையினரின் கருத்துகள்.. திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!

திருப்பூா் மாவட்டத்தில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

பல்லடம் அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு: மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஆய்வு!

பல்லடம் அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வந்த கிடங்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாம... மேலும் பார்க்க

மத்திய நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் கல்லமடை உத்தண்டகுமாரவலசு கொல்லன்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் எம்.பழனிசாமி (55). வாழை இலை விற்பனைக் கடையில் வேலை செய்து வரும்... மேலும் பார்க்க