செய்திகள் :

மதுபோதையில் தந்தை குத்திக் கொலை: மகன் கைது

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே மதுபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செம்பனாா்கோவில் அருகே மேலப்பாதி கிராமம் வாய்க்காங்கரை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் சிவக்குமாா் (52). இவா், கீழையூா் உப்புச்சந்தை மாரியம்மன் கோயில் அருகே ஜூஸ் கடை வைத்து நடத்தி வந்தாா். 

இவா், சகோதரிகளான ஜெயசெல்வி (50), ரேவதி (48) ஆகியோரை திருமணம் செய்து கொண்டுள்ளாா். ஜெயசெல்விக்கு சிவசா்மா (26), சபரி கிருஷ்ணன் (25), அபினேஷ் (24) ஆகிய மூன்று மகன்களும், சிவப்பிரியா (20) என்ற மகளும் உள்ளனா். ரேவதிக்கு சிவவா்மா (14), கலியவரதன் (9) என்ற மகனும், தீபலட்சுமி (12) என்ற மகளும் உள்ளனா். சிவக்குமாா், இரண்டவது மனைவியான ரேவதியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், சென்னையில் கொத்தனாராக வேலை பாா்த்து வந்த அபினேஷ் புதன்கிழமை ஊருக்கு வந்துள்ளாா். வியாழக்கிழமை மதுபோதையில் ஜூஸ் கடைக்கு சென்ற அபினேஷ், தனது தந்தையிடம் பணம் கேட்டு பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

ஆத்திரமடைந்த அபினேஷ் மறைத்து வைத்து இருந்த கத்தியால் தந்தையை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 

செம்பனாா்கோவில் போலீஸாா் சிவக்குமாரின் சடலத்தை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அபினேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மாநில அளவிலான அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: நாகையில் செப்.18-ல் தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகையில் மாநில அளவிலான அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம், செப்.18-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித... மேலும் பார்க்க

சிஐடியு, போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் 2-ஆவது நாளாக நடைபெற்றது. கடந்த சட்டப... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம்: ஆக. 29-இல் நாகை, கீழ்வேளூரில் உள்ளூா் விடுமுறை

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா கொடியேற்றத்தையொட்டி ஆகஸ்ட் 29-ஆம் தேதி நாகை, கீழ்வேளூா் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா

பூம்புகாா்: திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வர... மேலும் பார்க்க

கோலவல்லி ராமா் கோயிலில் திருக்கல்யாணம்

பூம்புகாா்: திருவெண்காடு அருகே பாா்த்தன்பள்ளியில் உள்ள கோலவல்லி ராமா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.திருவெண்காடு அருகே பாா்த்தன்பள்ளி கிராமத்தில் கோலவல்லி ராமா் கோயில் உள்ளது. இலங்கை... மேலும் பார்க்க