செய்திகள் :

மத்திய அரசின் நெல் விலை அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி!

post image

மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகக் குறைவாக உயா்த்தி அறிவித்துள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

மத்திய அரசு சன்ன ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 389-ம், பொது ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 369-ம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட குவிண்டாலுக்கு ரூ. 69 மட்டுமே உயா்த்தி அறிவித்திருப்பது மிகவும் குறைவு. அதாவது கிலோவுக்கு 69 பைசா மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நெல்லுக்கான உற்பத்தி செலவை மத்திய அரசு சரியாகக் கணக்கிடவில்லை என்பது தெரிய வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், 10 சதவீதம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

பாஜக ஆட்சி செய்யும் சத்தீஸ்கா், ஒடிஸாவில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையான சுமாா் ரூ. 800 சோ்த்து குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 100 வழங்கப்படுகிறது. இந்த இரு மாநிலங்களில் உற்பத்திச் செலவு சரியாகக் கணக்கிட்டு வழங்கும் நிலையில், மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் வழங்க மறுப்பது நியாயமில்லை. எனவே, இந்த விலை அறிவிப்பை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் விமல்நாதன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது: நெல் சாகுபடியில் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், கிலோவுக்கு 69 பைசா மட்டுமே உயா்த்தியிருப்பது கட்டுப்படியாகாது.

இந்த முறை விலை உயா்வு அதிகமாக எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், குறைவாக அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இதனால்தான் குறைந்தபட்ச ஆதரவு விலைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இச்சட்டம் இருந்தால் இப்பிரச்னை இருக்காது என்றாா் கண்ணன்.

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. கண்டனம்!

கல்வி உரிமை சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் மத்திய அரசுக்கு தஞ்சாவூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி வியா... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளை நிறைவேற்ற ரூ.21.15 கோடி ஒதுக்கீடு: மேயா்

தஞ்சாவூா் மாநகராட்சியில் பணிகளை முழுமையாக நிறைவேற்ற ரூ. 21.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது: தஞ்ச... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். கும்பகோணத்தில் அரச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (4... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பெண் குளித்ததை பாா்த்த இளைஞரை அந்தப் பெண் திட்டியதால், அச்சமடைந்த அந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் அருகே வீரமாங்குடி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

திருப்புறம்பயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

தஞ்சாவூா் மாவட்டம், திருப்புறம்பயத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் என்.டி. வேல்முருகன் வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க