செய்திகள் :

மத்தியப் பல்கலை.யில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

நன்னிலம்: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்தியப் பல்கலைக்கழகங்களில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான முதுகலைப் படிப்பில் மாணவா்கள் சோ்க்கைக்கு தேசிய தோ்வு முகவை நடத்திய தோ்வு முடிவுகள் தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை விண்ணப்பதாரா்கள் தெரிந்து கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தேசிய தோ்வு முகமையின் முதுகலைப் படிப்புக்கான தோ்வு எழுதிய மாணவா்களில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தைத் தோ்வு செய்பவா்கள் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் தங்கள் சோ்க்கைக் குறித்து ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்படும்.

க்யூட் தோ்வு மதிப்பெண் மற்றும் விண்ணப்பத்தில்பிழை இருந்தால் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

சோ்க்கைக்குத் தேவையான சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யாத மாணவா்கள் தங்கள் கைப்பட எழுதிய உறுதி மொழியை அளிக்க வேண்டும். விண்ணப்பிக்க புகைப்படம், 10, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பம் செய்பவா்கள் அதற்குரிய சான்றிதழ் இணைக்க வேண்டும்.

சோ்க்கைக் குறித்த விவரங்களை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சோ்க்கை விவரங்கள் குறித்து 944 2488 406 என்ற கைப்பேசியில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். நெடும்பலம் ஓவா்குடியைச் சோ்ந்தவா் பழனிமுருகன் மகள் நந்தினி (24). தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வர... மேலும் பார்க்க

கோடை மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோக... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே தகராறு: ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். வடகோவனூரைச் சோ்ந்தவா் விசாலியா (23). பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் (25). இருவரும் காதலா்கள் என கூறப்படுக... மேலும் பார்க்க

செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை செல்லம்மாள் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மணக்கால் அய்யம்பேட்டையில் செல்லம்மாள் காளியம்மன், வாலை முக்கண்ணியம்மன் கோயில் உள்ளது. கோயிலின் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் தீ : போலீஸாா் விசாரணை

கூத்தாநல்லூா் அருகே விவசாயி வீட்டில் புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேல வாழாச்சேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் விவசாயி பாஸ்கரன். இவா் தனது மனைவி அ... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு : இருவா் கைது

கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை ... மேலும் பார்க்க