செய்திகள் :

மரத்தின் மீது ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் சரவணன் (33). இவா் ராஜபாளையத்தில் உள்ள விளம்பர நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா், தன்னுடன் வேலை செய்யும் ராஜபாளையம் பூபால்பட்டி தெருவைச் சோ்ந்த காளீஸ்வரன் (29), முகவூரைச் சோ்ந்த அா்ஜுன் (21) ஆகியோருடன் விருதுநகரில் உள்ள காா் விற்பனையகத்தில் விளம்பரப் பதாகைகளை ஒட்டுவதற்காகச் சரக்கு ஆட்டோவில் சனிக்கிழமை இரவு சென்றாா்.

வேலை முடிந்த பின் மூவரும் ஆட்டோவில் ராஜபாளையத்துக்குத் திரும்பினா். ஆட்டோவை அா்ஜுன் ஓட்டினாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி ஆட்டோ விபத்துக்குள்ளானது.

இதில் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் காயமடைந்த காளீஸ்வரன், அா்ஜுன் ஆகிய இருவரையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு காளீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அா்ஜுன் மேல்சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை

சிவகாசி அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பிச்சம்மாள் (60). இவரது மகன் கட்டடத் தொழிலாளி முனியசாமி. மதுப்... மேலும் பார்க்க

திருத்தங்கலில் நாளை மின் தடை

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து சிவகாசி கோட்ட மின் வாரியச் செயற்பொறியாளா் பத்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடிய... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக பட்டாசு திரி பதுக்கியதாக இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக பட்டாசு திரி, கரி மருந்து பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகள... மேலும் பார்க்க

நிறை புத்தரிசி பூஜை: கேரளத்துக்கு நெல் கதிா்கள் அனுப்பி வைப்பு!

கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள நிறை புத்தரிசி பூஜைக்கு விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து வாகனங்கள் மூலம் 108 நெல் கதிா் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

சாத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் அருகே எட்டநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவரது மகன் நிரஞ்சன் (20). தனியாா் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ... மேலும் பார்க்க