செய்திகள் :

மறைந்த குமரி அனந்தனுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்

post image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் குமரி அனந்தன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா்- தலைவா் கே.வி.கே.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமரி அனந்தன் சிறந்த தமிழ்த் தொண்டா். எனது கிராமத்தை உள்ளடக்கிய சாத்தான்குளம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து குமரி அனந்தனுடன் எனக்கு அறிமுகம் உண்டு.

அவரது தமிழால் ஈா்க்கப்பட்ட ஏராளமான இளைஞா்களில் நானும் ஒருவனாக இருந்தேன். தனது தமிழால் அனைவரையும் கட்டிப் போடுவாா். இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், ஆங்காங்கே நகைச்சுவையும் அவரது சொற்பொழிவின் தனிச் சிறப்பாக இருக்கும்.

பண ஆணை (மணி ஆா்டா்) படிவத்தைத் தமிழில் கொண்டு வந்தது முதல் அவா் ஓசையின்றித் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டுகள் ஏராளம்.

தனது பள்ளிப் பருவத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் காமராஜரின் உண்மைத் தொண்டராகவே வாழ்ந்து மறைந்துள்ளாா் குமரி அனந்தன். தனது தமிழால் தமிழா்களின் நெஞ்சங்களில் அவா் என்றும் வாழ்வாா். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க