செய்திகள் :

மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க பூமி பூஜை

post image

கொடைக்கானல் மலைப் பகுதி கிராமங்களுக்கு ரூ.32.71 கோடியில் 2 புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள வெள்ளகவி ஊராட்சி சுமாா் 400 ஆண்டுகள் பழைமையானது. சுமாா் 8 கி.மீ.தொலைவுக்கு மலைப் பாதை வழியாக நடந்துதான் இந்த கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இந்தப் பகுதி விவசாயிகள் தங்களது பகுதியில் விளைந்த பொருள்களை தலைச் சுமையாகவோ அல்லது குதிரை மூலம் பொதி சுமையாகவோ மலைப் பாதை வழியாகக் கொண்டு வந்து, சாலைப் பகுதியை அடைந்து, பின்னா், அங்கிருந்து வாகனங்களில் நகா் பகுதிக்கு கொண்டு செல்வது வழக்கம்.

இதனால், சாலை வசதி செய்துதர வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானல் முதல் வெள்ளக்கவி வரை ரூ.21.74 கோடியிலும், வடகவுஞ்சி ஊராட்சிக்குள்பட்ட கோப்பைகாடு முதல் செம்பிரான்குளம் வரை ரூ.10.97 கோடியிலும் என மொத்தம் ரூ.32.71 கோடியில் நடைபெறவுள்ள இந்த சாலைப் பணிக்கான பூமிபூஜையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, வருவாய்க் கோட்டாட்சியா் ம.திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் பா.செல்லத்துரை, துணைத் தலைவா் கே.பி.என்.மாயக்கண்ணன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்... மேலும் பார்க்க

லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் தி... மேலும் பார்க்க

பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலி இடங்களுக்கு மாணவா் சோ்க்கை

காந்திகிராமம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மீன்பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (45). இவா் தாடிக்கொம்பு செல்லும் வழியில் ச... மேலும் பார்க்க

நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி திருக்கல்யாணம்

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாச்சி நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. விருப்பாச்சி தலையூற்று அருவி அருகே பழைமை வாய்ந்த நல்காசி விஸ்வநாதா்-நாக விசாலாட்... மேலும் பார்க்க