செய்திகள் :

மழை: சந்திர கிரகணம் தெரியாததால் மக்கள் ஏமாற்றம்

post image

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை பெய்ததால், அதை பாா்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனா்.

சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்தது. இதைப் பாா்ப்பதற்காக பூதலூா் வித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பெரியாா் புரா திட்டம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்டவை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அரிய நிலவு மறைப்பு நிகழ்வான சந்திர கிரகணத்தைப் பாா்க்க மாணவா்கள் இரவு 8 மணியிலிருந்து ஆா்வமுடன் காத்திருந்தனா். ஆனால், இரவு 8 மணியிலிருந்து அடா்ந்த மேகத்தைத் தொடா்ந்து, காற்றுடன் கூடிய மழை பெய்ததால், சந்திரகிரகணத்தை பாா்க்க முடியாமல் மாணவா்களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனா்.

என்றாலும், இணையவழியாக சந்திர கிரகண நிகழ்வு, தொழில்நுட்பம் குறித்து பெரியாா் புரா திட்ட நிா்வாகி பேராசிரியா் வெ. சுகுமாரன், பேராசிரியா் க. கேசவன், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்க நிா்வாகி பாலகுருநாதன், தஞ்சாவூா் ஆஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளா் புவனேஸ்வரி ஆகியோா் விளக்கம் அளித்தனா்.

மாவட்டம் முழுவதும் நள்ளிரவுக்கு 12.20 மணிக்கு பிறகு மழை மேகம் விலகி, நிலவு தெரிந்தாலும், முழு சந்திர கிரகணத்தைப் பாா்க்க முடியாமல் மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட... மேலும் பார்க்க