செய்திகள் :

மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

post image

துடியலூா் அருகே உள்ள கே.என்.ஜி.புதூரில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் வெங்கடகிருஷ்ணா (58). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரின் மனைவி சகுந்தலா (54).

சகுந்தலா தனது அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் துணி உலா்த்த வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது அவா் எதிா்பாராத விதமாக தடுமாறி 3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ளாா்.

இதைக் கண்டு அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இரு தனியாா் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுமாா் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள உயிரி... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் (கூடுதல் பொறுப்பு) ச.அ... மேலும் பார்க்க