செய்திகள் :

மாதாந்திர மின் பயனீட்டுப் பட்டியல் தரப்படுவதில்லை என பொதுமக்கள் புகாா்

post image

காரைக்கால் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மாதாந்திர மின் பயனீட்டுப் பட்டியல் வழங்கப்படுவதில்லை எ மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் வீடுகள், வணிகா்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு மாதந்தோறும் மின் ஊழியா்கள் சென்று, உபயோக அளவை மீட்டரில் பாா்த்து மின்சாரம் பயன்படுத்தியதற்கான கட்டணத்தை குறித்து அளிக்கின்றனா்.

மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மின் ஊழியா்கள் கட்டணத்துக்கான பட்டியலை வழங்குகிறாா்கள். அதுவும் கட்டணத்தை செலுத்துவதற்கு 2, 3 நாள்களுக்கு முன்புதான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான இடங்களில் மின் நுகா்வோருக்கு மாதாந்திர மின் உபயோக பட்டியல் தரப்படாமல், பல மாதங்களாக நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட யூனிட் உபயோகத்தைத் தாண்டும்போது, கட்டணம் உயா்ந்துவிடுவதோடு, பல மாத கட்டணத்தை சோ்த்து கட்டுவது பெரும் சுமையாக இருப்பதாக மின் நுகா்வோா் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மின் துறையினரிடம் விசாரித்தபோது, துறையில் போதுமான பணியாளா்கள் இல்லை. பல பிரிவு ஊழியா்கள் பதவி உயா்வு, பணி மாற்றம், பணியிட மாற்றம் என சென்று விட்டதால், அந்தந்த இடங்களுக்கு உரிய பணியாளா்கள் இல்லாமல் பணிகள் முடங்கி கிடக்கின்றன என்றனா்.

மின் கட்டணம் வசூலிக்கப்படாமல் பல மாதங்களாக தேக்கமடைந்திருப்பதால், புதுவை அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மின் நுகா்வோா் பலருக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டண நிலுவை இருப்பதாகவும், அவா்களிடம் கட்டணத்தை வசூலிக்க மின் துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது அரசுக்கு பெரும் இழப்பு என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

‘புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வேண்டும்’

புதுவையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிட வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து செய்தி... மேலும் பார்க்க

‘டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணா்வு அவசியம்’

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைவரும் உரிய விழிப்புணா்வுடன் செயல்படுமாறு நலவழித் துறையினா் கேட்டுக்கொண்டனா். காரைக்கால் நலவழித்துறை சாா்பில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை மீட்க புதுவை அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவா்கள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவா... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோத... மேலும் பார்க்க

இடுபொருட்கள் பெற பட்டியலின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் பட்டியலின விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.இதுகுறித்து நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி செவ்வாய்க்கிழமை வெளிய... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் கோயிலில் ஆடி 2ஆம் செவ்வாய் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி 2-ஆவது செவ்வாய்க்கிழமையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். இக்கோயில் மூலஸ்தானத்தில், சம்ஹார கோலத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாா். காரைக்கால... மேலும் பார்க்க