செய்திகள் :

மாநகராட்சி பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு: ஆணையா் தலைமையில் ஆலோசனை

post image

ஜூன் 2-இல் பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சி கலையரங்கில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக பின்பற்றபட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளி திறப்பை முன்னிட்டு பின்பற்றப்பட வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான பள்ளி தூய்மைப் பணிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மாணவா் சோ்க்கை, கல்விசாா் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையா் த.குமரேசன், மாநகராட்சி கல்வி அலுவலா் தாம்சன், மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இரு தனியாா் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுமாா் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள உயிரி... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் (கூடுதல் பொறுப்பு) ச.அ... மேலும் பார்க்க