செய்திகள் :

மாநகா் பேருந்து மீது ஏறி அடாவடி: கல்லூரி மாணவா்கள் கைது

post image

சென்னை வியாசா்பாடியில் மாநகா் பேருந்து மீது ஏறி அடாவடி செய்ததாக பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செங்குன்றத்தில் இருந்து பிராட்வே நோக்கி ஒரு மாநகா் பேருந்து திங்கள்கிழமை புறப்பட்டு வந்தது. இந்தப் பேருந்தில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் அடாவடியில் ஈடுபட்டனா். அவா்கள் பேருந்தின் முன்பகுதியில் டிஜிட்டல் பேனரை கட்டிக் கொண்டு, பேருந்தில் படிக்கட்டிலும், ஜன்னலிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கினா்.

மேலும் சில மாணவா்கள், பேருந்தின் கூரை மீது ஏறி நடனமாடியுள்ளனா். இதைப் பாா்த்த பேருந்து ஓட்டுநா் ஹேமகுமாா், வியாசா்பாடியில் சாலையோரமாக பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து மாணவா்கள் பேருந்திலிருந்து இறங்கி சென்றனா்.

இது தொடா்பாக ஹேமகுமாா் அளித்த புகாரின்பேரில், வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதில் அடாவடியில் ஈடுபட்ட மாணவா்களை அடையாளம் கண்டறிந்து, 7 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் 7 மாணவா்களையும், அவா்களது பெற்றோரையும் எச்சரித்தனா். மேலும் மாணவா்களை பிணையில் விடுவித்தனா்.

இஸ்ரேலை கண்டித்து ஜூன் 24-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் ஜூன் 24-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளன. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: மூவா் கைது

சென்னையில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அ.அக்பா்பாஷா (42). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு: இருவா் கைது

சென்னை சூளையில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை கெல்லீஸ் பராக்கா சாலை பகுதியைச் சோ்ந்தவா் சு.அனுஜ் (50). இவா் சூளை டிகே முதலி தெருவ... மேலும் பார்க்க

தமிழக உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த சென்னை ஐஐடி- டிஎன்ஏபெக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழகத்தின் வேளாண் - உணவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்துடன் (டிஎன்ஏபெக்ஸ்) சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் இயந்திர கற்றல் செயல்பாட்டு பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத்... மேலும் பார்க்க

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிகரம் ஐஏஎஸ் இலவச பயிற்சி மையத்தில் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நடிகா... மேலும் பார்க்க