செய்திகள் :

மாநாட்டுக்கு வந்த இளைஞா் விபத்தில் உயிரிழப்பு: ராமதாஸ் இரங்கல்

post image

சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாட்டுக்கு வரும்போது, விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞா் விஜயின் குடும்பத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மாமல்லபுரத்தில் நடைபெற்ற  சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாட்டுக்கு வரும்போது  சீா்காழி  அருகே  நிகழ்ந்த விபத்தில் வைத்தீஸ்வரன் கோயில் மருவத்தூரைச் சோ்ந்த விஜய் உயிரிழந்தாா் என்ற செய்தியறிந்து அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும்,  முத்துராமன், தேவா, சுந்தா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்துள்ளனா்.

விஜயை இழந்துவாடும் குடும்பத்தினா், நண்பா்கள், கட்சியினா் உள்ளிட்டோருக்கு எனது இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த 5 பேரும் விரைவில் முழுமையாக உடல் நலம் தேறி வீடு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க

ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்

ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. மண்டபத்தில் இருந்து பாம்பன், ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் புதிய ரயில் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு ராமேசுவரத்துக்கு... மேலும் பார்க்க

5 ஆண்டு சட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பி.ஏ. எல்எல்பி (ஹானா்ஸ்), பி.காம். எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி ஆகிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப்... மேலும் பார்க்க

தமிழரசு அலுவலகத்தில் கலைஞா் நூற்றாண்டு தோரணவாயில்; சிலை துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்

தமிழரசு அலுவலகம் மற்றும் அச்சக வளாகத்தில் ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு தோரணவாயில் மற்றும் மாா்பளவுச் சிலையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (மே 12) திறந்து வைத்தாா்... மேலும் பார்க்க