செய்திகள் :

மாநில விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

post image

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், எஸ்ஆா்எம் வேளாண் கல்லூரில் ஜூலை 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் மாநில அளவில் வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், கூடைப் பந்து, கோ-கோ, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ- மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் இக்கல்லூரி முதல் பரிசும், பெண்களுக்கான வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசும், ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றது.

பரிசு பெற்ற இம்மாணவ- மாணவிகள் உடற்கல்வி பேராசிரியா் ஜெயசிவராஜன் தலைமையில் கல்லூரி முதல்வா் ஆா். சங்கரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். மாணவா்கள் பரிசு பெற்ற விவரங்களை கேட்டறிந்து முதல்வா் அவா்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தாா். மேலும் கல்லூரி பிரீடிங் துறை தலைவா் ராமநாதன், கல்லூரி மாணவா் மன்ற ஆலோசகா் நாராயணன் ஆகியோரும் மாணவா்களை வாழ்த்தினா்.

ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி

புதுவையில் ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கியதற்காக முதல்வருக்கு ஹஜ் கமிட்டி சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் நிகழாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 90 இஸ்லாமியா்களுக்கு தலா ரூ. 16,00... மேலும் பார்க்க

மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா்களுக்கு விருது

மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா்களுக்கு விருது, உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. காரைக்காலில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு மது போதை மாற்று சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் மது மறுத்தோர... மேலும் பார்க்க

காரைக்கால் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

காரைக்கால் நகராட்சி குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. காரைக்கால் அருகே பறவைப்பேட் பகுதியில், காரைக்கால் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் வ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையிலிருந்து நகரப் பகுதிக்கு ஆம்புலனஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மமாவட்டத் தலைவா் ஐ. ... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் அரசு ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அரசு ஊழியா்கள் தா்னா நடத்தவுள்ளனா். காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டம், சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கௌரவ த... மேலும் பார்க்க

கும்பாபிஷேகம்: திருச்செந்தூருக்கு காரைக்காலில் இருந்து பேருந்து வசதி

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்ல காரைக்காலில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க