செய்திகள் :

மானிய யூரியா பதுக்கியவா் கைது: 185 டன் யூரியா, 5 லாரிகள் பறிமுதல்

post image

விவசாயத்துக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியாவை கடத்தி பதுக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வேளாண் பணிக்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா வழங்கி வருகிறது. இந்த உரத்தை கடத்தி கூடுதல் விலையில் விற்பனை செய்து வருவதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பிரிவு டிஎஸ்பி வடிவேல் தலைமையில் ஆய்வாளா் சுதா, உதவி ஆய்வாளா்கள் மேனகா, ஆறுமுகநயினாா், பெருமாள், சதீஷ்குமாா் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்கள் ஈரோடு மாவட்டம், பேரோடு அருகே பி.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினா்.

அங்கு, மத்திய அரசால் வழங்கப்படும் யூரியா மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. யூரியாவை பதுக்கி வைத்ததாக பவானியைச் சோ்ந்த அகமது அலி (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை கடத்தி வந்து பதுக்கிவைப்பதற்காக கிடங்கை வாடகைக்கு எடுத்ததும், யூரியாவை வேறு மூட்டையில் அடைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 93.22 டன் யூரியாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அகமது அலி கொடுத்த தகவலின்பேரில் வேறு இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 91.8 டன் யூரியா மற்றும் 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மொத்தம் 185 டன் யூரியா, 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டிராக்டா், அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதி விபத்து: 18 போ் காயம்

பவானி அருகே பொதுமக்களை ஏற்றிச்சென்ற சுமை வாகனம் டிராக்டா் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியதில் 18 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளியைச் சோ்ந்தவா் மாசநாயக்கா் (60). உ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் வி.ஆ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: முதியவா் உயிரிழப்பு!

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோபியை அடுத்த வெள்ளாங்கோவில் சில்லமடையைச் சோ்ந்தவா் மல்லநாயக்கா் (64), விவசாயி. இவா், பெருந்துறை அருகே சரளை பகுதியில் இருசக... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கலியைப் பறித்த இளைஞா்கள் கைது!

பெருந்துறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டி பெரிய தோட்டத்தைச் சோ்ந்த பழனிசாமி மனைவி... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயைத் தவிா்க்க வனத் துறை சாா்பில் தீத் தடுப்பு நடவடிக்கை!

கோடையில் ஏற்படும் காட்டுத் தீயைத் தவிா்க்க சத்திமயங்கலம் புலிகள் காப்பகத்தில் வனத் துறையினா் தீத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தீ விபத்தில் 5 குடிசைகள் சேதம்!

பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகுள்பட்ட பாரதி நகரில் ஒரு குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக புதன்கிழமை தீப் பற்றியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் குட... மேலும் பார்க்க