வாஷிங்டன் வந்த டூம்ஸ்டே விமானம்! யுஸ்-ஈரான் பதற்றத்தை அதிகரிக்கும் நைட்வாட்ச்!
மாமியாரைக் குத்திக் கொன்ற மருமகன் கைது
தேனி மாவட்டம், கூடலூா் அருகே மாமியாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் சுருளி (45). இவரது மனைவி நதியா. இவா்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், கோபித்துக் கொண்டு நதியா, கூடலூா் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாமியாா் வீட்டுக்குச் சென்ற சுருளி, மனைவியை வீட்டுக்கு அழைத்தாராம். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சுருளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாா் பூங்கொடியை குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சுருளியைத் தேடி வந்தனா். இந்த நிலையில், காமயகவுண்டன்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த சுருளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.