எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.4 மற்றும் 77 டிகிரியாக இருந்தது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரியாகவும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்மேற்கிலிருந்து மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், அவை பெரும்பாலும், வெள்ளைக்கழிச்சல், நாள்பட்ட சுவாசநோய் மற்றும் காக்ஸிடியோசிஸ் போன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளையும், முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு எதிரான பரிசோதனையை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.