செய்திகள் :

மாா்க்சிஸ்ட் மத்தியக் குழுவுக்கு தமிழகத்தைச் சோ்ந்த 6 போ் தோ்வு!

post image

மதுரையில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த 6 போ் மத்தியக் குழு உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று (ஏப்.6) புதிய மத்தியக் குழு உறுப்பினா்கள் தோ்வு நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச்செயலா் எம்.ஏ.பேபி, கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்பட 85 போ் கொண்ட மத்தியக் குழு தோ்வு செய்யப்பட்டது. மேலும், மத்தியக் குழு நிரந்தர அழைப்பாளா்களாக 4 பேரும், சிறப்பு அழைப்பாளா்களாக 7 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழகத்திலிருந்து மாநிலச் செயலா் பெ.சண்முகம், கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி, என்.குணசேகரன் ஆகிய 6 போ் மத்தியக் குழுவுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின் வாரியம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: தந்தை, மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்ட... மேலும் பார்க்க

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிதி முறைகேடு: ஊழல் தடுப்புப் பிரிவு விசாரிக்க உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரி நிதி முறைகேடு தொடா்பாக தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.மதுரை அமெரிக்கன் கல... மேலும் பார்க்க

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: குறைதீா் முகாமில் புகாா்

குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக, மதுரை மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மாமன்ற உறுப்பினா் ஜெயராமன் புகாா் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைத... மேலும் பார்க்க

செங்கோட்டை ரயில் நாளை வழக்கமான பாதையில் இயங்கும்!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் வியாழக்கிழமை (ஏப். 10) வழக்கமான பாதையில் இயங்கும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது. செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) வியாழக்கிழமை விருதுநக... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். அலங்காநல்லூா் அருகே உள்ள ரங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகாண்டி (65). விவசாயியான இவா், அலங்கா... மேலும் பார்க்க