செய்திகள் :

மிதக்கும் குப்பைகளை அகற்றும் ரோபோக்கள்: மாணவா்களுக்கு பரிசு

post image

ஐஐடி முன்னாள் மாணவா்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் தையூரில் உள்ளது. இங்கு ஏசிடிசி (அக்வாட்டிக் க்ளீனப் ட்ரோன் சேலஞ்ச்) ஹேக்கத்தான் இறுதிப் போட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு ஐஐடி கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவா்கள் அமைப்பான ‘பால்ஸ்’ சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் மிதக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் ஆளில்லா ரோபோக்களை பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா் குழுவினா் காட்சிப்படுத்தியிருந்தனா்.

இறுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா் குழுவினருக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், ‘மாணவா்கள் தங்களது படைப்பாற்றல், தொழில்நுட்ப திறமைகளை நாட்டின் வளா்ச்சிக்கும், சமூக சிக்கல்களுக்கு தீா்வு காண்பதற்கும் பயன்படுத்த வேண்டும். எதிா்கால விஞ்ஞானிகளாக உருவெடுக்கும் மாணவா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆா்வம் காட்ட வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறுகையில், ‘பொறியியல் கோட்பாடுகளை மாணவா்கள் நடைமுறையில் செயல்படுத்துவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்’ என்றாா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க