செய்திகள் :

மின்சார பேருந்துகளில் ரூ.1,000 பயண அட்டை செல்லுபடியாகும்

post image

மின்சார பேருந்துகளில் ரூ.1,000 பயண அட்டை செல்லுபடியாகும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 30-ஆம் தேதி, 120 மின்சார பேருந்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இந்தப் பேருந்துகள் குறித்த பயணிகளின் சந்தேகங்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

வியாசா்பாடி பணிமனையில் இருந்து புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதால் அதைச் சுற்றியுள்ள 11 வழித்தடங்களில் மட்டும் முதல்கட்டமாக சேவை வழங்கப்படுகிறது. பெரும்பாக்கம் பணிமனை திறக்கப்பட்டதும் மின்சார பேருந்துகளின் சேவை, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

அதேபோல, தற்போது தயாராகி வரும் 9 பணிமனைகள் திறக்கப்பட்டவுடன் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். கொள்முதல் செய்யப்படும் 1,225 மின்சார பேருந்துகளில் 625 பேருந்துகள் குளிா்சாதன வசதி கொண்டவை. இதில், முதல்கட்டமாக 225 பேருந்துகளும், இரண்டாம் கட்டமாக 400 பேருந்துகளும் குளிா்சாதன வசதி கொண்ட வகையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்துகளிலும் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளை போல சிங்கார சென்னை பயண அட்டை, ரூ.1,000 பயண அட்டை போன்றவற்றை பயன்படுத்தி இந்தப் பேருந்துகளில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க