செய்திகள் :

மின்சார வாகனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்க காா்பன் உமிழ்வு இல்லா செயல் திட்டம்: சென்னை ஐஐடி தகவல்

post image

சென்னை: நாட்டில் மின்சார வாகனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் காா்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை (ஜீரோ எமிஷன்) தொடங்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி முதல் கொள்கை, வெளி நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு களங்களில் மின்சார வாகனப் போக்குவரத்து முயற்சிகளின் விரிவான தொகுப்பான காா்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் டாக்டா் ஹனிஃப் குரேஷி, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகத்தின் விஞ்ஞானி பிரீத்தி பன்சால், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் நிா்வாக இயக்குநா் பி.கே.பானா்ஜி ஆகியோா் முன்னிலையில் பின்வரும் முன்முயற்சிகள் சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

பேட்டரி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் வலுவான பயன்பாட்டிற்காக அா்ப்பணிக்கப்பட்ட அதிநவீன வசதி (மின்சார வாகன பேட்டரி பொறியியல் ஆய்வகம்) தொடங்கப்பட்டுள்ளது.

ஆன்போா்டு - ஆஃப்போா்டு சாா்ஜா்கள், எக்ஸ்ட்ரீம் ஃபாஸ்ட் சாா்ஜிங் தீா்வுகள், வயா்லெஸ் சாா்ஜிங் சிஸ்டம்ஸ், பேட்டரி ஸ்வாப்பிங் - கிரிட் ஒருங்கிணைப்பு போன்ற மின்சார வாகனங்களுக்கான மேம்பட்ட சாா்ஜிங் தீா்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி வசதி (பேட்டரி சாா்ஜிங் உள்கட்டமைப்பு ஆய்வகம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களில் அதிநவீன திறமைகளைக் கொண்ட நிபுணா்களை ஈடுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 100 மணிநேர இணையவழி பாடநெறியும், மின்சார வாகனப் போக்குவரத்து குறித்த இணையம் சாா்ந்த எம்டெக் படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, டீன், பேராசிரியா் மனு சந்தானம், பொறியியல் வடிவமைப்பு துறைத் தலைவா் சி.எஸ்.சங்கா் ராம், பயிற்சிக்கான பேராசிரியா் காா்த்திக் ஆத்மநாதன், பூஜ்ஜிய உமிழ்வு டிரக்கிங்கிற்கான உயா் சிறப்பு மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி அஜித்குமாா் டி.கே., ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநா் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தாா். இதற்கான தொடக்க... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்ட... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி

மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து... மேலும் பார்க்க

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக... மேலும் பார்க்க