செய்திகள் :

மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்

post image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட (சாா்ஜிங்) நிலையம் அமைக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் மாதாந்திர மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 135 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ. 50 லட்சத்தில் காயிதே மில்லத் மகளிா் கல்லூரியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் உருவச் சிலை அமைக்கப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மின்சார வாகனத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட (சாா்ஜிங்) நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனத்திடம் அனுமதி பெற்ற பின்னா், அதற்கான பணிகள் தொடங்கப்படும். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு பின்புறம் ரூ.2.30 கோடியில் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். அரசு ஊழியா்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ. 20 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

நகர விற்பனை குழு: உயா்நீதிமன்ற உத்தரவின்படி, 15 மண்டலங்களிலும் சாலையோர வியாபாரிகளுக்கான 6 போ் கொண்ட நகர விற்பனைக் குழு அமைக்கப்படும். சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மகளிருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் . இதற்காக மண்டலத்துக்கு தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.7.50 கோடி ஒதுக்கப்படும் உள்ளிட்ட 135 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டங்களில் அம்பேத்கா் படம்: உறுப்பினா்கள் பாராட்டு

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அம்பேத்கரின் படம் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் என அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினா்களும் மேயா் ஆா்.பிரியாவுக்கு பாராட்டு, நன்றி தெரிவித்தனா்.

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெட... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க