செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் உயிரிழப்பு

post image

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் அருகேயுள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராமசுப்ரமணியன் மகன் அரிகாா்த்திகேயன் (17). இவா் முதுகுளத்தூா் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

இந்த நிலையில், வெங்கலகுறிச்சி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிக்கான தண்ணீா் தேவைக்காக மின் மோட்டாா் சுவிட்சை ஞாயிற்றுக்கிழமை மாலை இயக்கினாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே அரிகாா்த்திகேயன் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக கீழத்தூவல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோவிலாங்குளம் பிள்ளையாா் கோயில் ஊருணியை தூா் வார கோரிக்கை

கமுதி அருகே குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஊருணியைத் தூா் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் குடிநீா் ஆதாரமாக விளங்கும் பிள்ளையாா் கோயில் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம், ரெகுநாதபுரம், மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அட... மேலும் பார்க்க

தொண்டி அருகே சிறாா் திருமணம் தடுத்து நிறுத்தம்

தொண்டி அருகே நம்புதாளையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடற்கரை பகுதியில் உள்ள பாலமுருக... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞா் மாயம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் மாயமானது குறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள காவனூா் ஊராட்ச... மேலும் பார்க்க

வார விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் குவிந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள்... மேலும் பார்க்க