TVK: "நாங்க வந்தாலே கரண்ட் கட் பண்றீங்க; ஏன் பயப்படுறீங்க?" - திமுகவை அட்டாக் செ...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
கும்பகோணத்தில் பணியின்போது தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள வாலைக்குறிச்சி மதனத்தூா் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் காா்த்தி (36), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி சீதா (32) ஒரு பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் காா்த்தி கும்பகோணம் அம்மன்கோயில் தெருவில் உள்ள சுந்தா் வீட்டில் டிரில்லிங் இயந்திரம் மூலம் சுவரில் துளையிட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் பா. ரமேஷ் இறந்தவரின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.