செய்திகள் :

`மியான்மரில் மீண்டும் அது நடக்கும்..!’ - மக்களை பீதியடைய செய்த ஜோதிடர் கைது

post image

மியான்மரில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மீண்டும் இதே போன்று மற்றொரு நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறி மக்களை பீதியடைய செய்ததாக ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 28 -ம் தேதி மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3000-க்கு மேற்பட்டோர் பலியானதாக அந்நாட்டின் ராணுவத்தின் தலைமையிலான அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி ஜான் மோ தி என்பவர் நிலநடுக்கம் குறித்து ஒரு டிக் டாக் வீடியோ பகிர்ந்திருந்தார். அதில் ஏப்ரல் 21ஆம் தேதி மீண்டும் மியான்மரில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் பெரிய அளவிலான நிலநடுக்கம் தாக்கும் என கூறியிருந்தார். இந்த வீடியோ வேகமாக பரவியது.

அதனை தொடர்ந்து பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக ஜான் மோ தியை கைது செய்ய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்ததாக மியான்மரில் தகவல் அமைச்சகம் கூறியது.

3 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்ட அவரது டிக்டாக் கணக்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இவரது வீடியோக்கள் அனைத்தும் ஜோதிடம் மற்றும் கைரேகை அடிப்பையிலான கணிப்புகளை கொண்டிருந்தன. மியான்மர் மக்கள் அவரது இந்த எச்சரிக்கை வீடியோவை தீவிரமாக எடுத்துக் கொண்டு, தங்களின் வீடுகளைக் கூட விட்டு வெளியேறும் அளவுக்கு பதற்றம் பரவி இருக்கிறது.

பேரழிவு ஏற்படக்கூடிய நிலநடுக்கம் ஏற்படும் என்று டிக் டாக் கணக்கு மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி அந்த ஜோதிடர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ”இதே போல் போலியான செய்திகளை எழுதுபவர்கள் அல்லது பரப்புபவர்கள், பகிர்பவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிலநடுக்கங்கள் பல காரணிகளை சார்ந்திருப்பதால் அவற்றை கணிக்க முடியாது என்று நில அதிர்வு நிபுணர்கள் கூறினர். ஜோதிடர் போன்ற கணிப்புகளை கேட்டு பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி முகாமிட்டதாக யாங்கோனில் வசிக்கும் ஒருவர் AFP உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு; வாடிக்கனுக்கு வெளியே நல்லடக்கம் - முழுத் தகவல்

மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று காலைதொடங்கி நடைபெற்றுவருகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக ... மேலும் பார்க்க

"கடைக்காரரிடம் மதத்தைக் கேட்டு இந்துக்கள் பொருட்கள் வாங்க வேண்டும்" - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக-வைச் சேர்ந்த மகாராஷ்டிரா மீன்வளத்துற... மேலும் பார்க்க

China: அழகைக் கூட்ட 100 அறுவை சிகிச்சை; சீன பெண் செலவளித்த தொகை எவ்வளவு தெரியுமா?

சீனாவைச் சேர்ந்த இளம் பெண், தன்னை அழகாக காண்பித்துக் கொள்ள 100க்கும் மேலான அறுவை சிகிச்சைகளைச் செய்து கொண்டுள்ளார்.சாதாரணமாகவே பெண்கள் தங்களை அழகாக காண்பித்துக் கொள்ள பல விஷயங்களைச் செய்கின்றனர். கிரா... மேலும் பார்க்க

`முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணமகன் - என்ன நடந்தது?

திருமணத்தில் ஒலிக்கப்பட்ட பாடலால், முன்னாள் காதலின் நினைவு வந்து மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இன்றைக்கு நடைபெறும் திருமணங்களில், அந்த நாளை மறக்க முடியாததாக மாற்ற குடும்பத்தினர் பல விஷயங்... மேலும் பார்க்க

`பேபி, அவர் நமக்கு மகளாக பிறப்பார்' - ஜாக்குலின் தாயார் பெயரில் கார்டனை கிஃப்ட் கொடுத்த சுகேஷ்

டெல்லியில் தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சுகேஷ் தான் மிரட்டி மற்றும் மோசடி செய்து சம... மேலும் பார்க்க

தினமும் விமானத்தில் கல்லூரிக்குச் செல்லும் பாப் பாடகி - ஒரு நாளுக்கு எவ்வளவு செலவிடுகிறார் தெரியுமா?

தினமும் கிட்டத் தட்ட 20,000 ரூபாய் செலவு செய்து விமானத்தில் கல்லூரிக்கு சென்று வருகிறார் ஜப்பானை சேர்ந்த பாப் சிங்கர்.பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லும் பயணத்தை மாணவர்கள் தூரம், வசதி, விலைப் பொறுத்து த... மேலும் பார்க்க