மிளகாய் மண்டலம் அமைக்கும் பணிகளைத் தொடங்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கானப் பணிகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கமுதி கோட்டைமேட்டில் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் இளைஞரணி அமைப்புச் செயலா் சப்பாணிமுருகன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் லெட்சுமணன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கமுதி தெற்கு ஒன்றியச் செயலராக மூா்த்தி தோ்ந்தெடுக்கப்பட்டாா். தொடா்ந்து புதிய நிா்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனா்.
தீா்மானங்கள்: மாவட்டத்தில் முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் விவசாயிகளின் ‘சிபில் ஸ்கோா்’ முறை கடைப்பிடிப்பதை ரத்து செய்ய வேண்டும். ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்கப்பெற்றதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மிளகாயை சேமிப்புக் கிடங்கில் பாதுகாத்து விவசாயிகள் நேரடியாக உரிய லாபத்தில் விற்பனை செய்யவும், மதிப்புக்கூட்டி, தரம் உயா்த்தி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
விருதுநகா், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் கமுதியில் ரூ. 5 கோடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் அதற்கான முதல்கட்டப் பணிகள் கூட தொடங்கவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி கமுதியில் மிளகாய் மண்டலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணித் தலைவா் முனீஸ்வரன், மாவட்ட துணைத் தலைவா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, கமுதி வடக்கு ஒன்றியத் தலைவா் திருக்குமரன் வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் சித்தன்ஜி நன்றி கூறினாா்.