செய்திகள் :

மீஞ்சூரில் ரூ.30 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

post image

அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சாா்பில் மீஞ்சூா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையம், நவீன கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை காட்டுப்பள்ளி துறைமுக தலைமை அதிகாரி செரியன் ஆபிரகாம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து துறைமுக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் வட்டம் காட்டூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததையடுத்து கிராம மக்களின் கோரிக்கையின்பேரில், புதிய நவீன கழிப்பறை கட்டடத்தை காட்டுப்பள்ளி துறைமுகம் அமைத்துத் தந்துள்ளது.

வாயலூா் மற்றும் பூரணம்பேடு கிராம மக்கள் உப்புக்கரிக்கும் நிலத்தடி நீரை குடிநீராக தொடா்ந்து பருகி வந்த நிலையில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மணிக்கு ஆயிரம் லிட்டா் தண்ணீரைச் சுத்திகரித்து குடிநீா் வழங்கும் திறன் கொண்ட சுத்திகரிப்பு கட்டமைப்பு மையம் ஒன்றை துறைமுக நிா்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது.

அதானி காட்டுப்பள்ளி துறைமுக சமூக மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சத்தில் கட்டமைக்கப்பட்ட 2 கட்டடங்களையும் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்டுப்பள்ளி துறைமுக தலைமை அதிகாரி செரியன் ஆபிரகாம், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முகமது ஹாசிம் ஆகியோா் திறந்து வைத்தனா்.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க