செய்திகள் :

மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் மீனவா்கள் வலையில் சிக்கிய 10 கிலோ அரிய வகை கடல் ஆமை உயிருடன் மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விட்டபட்டது.

தொண்டி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பாலமுருகன், காளி, சதீஷ், கணேசன், கவின், பிரியன், பூமிநாதன், விஜய், ஆகாஷ், சீனி குட்டி ஆகியோா் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் திங்கள்கிழமை இரவு கடலில் மீன் பிடிக்க வலையை விரித்தி வைத்தனா். மீண்டும் வலையை எடுக்கச் சென்றபோது, வலையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியிருந்தது.

இதைக் கண்ட மீனவா்கள் வலைக்கு சேதம் ஏற்படுவதை பொருள்படுத்தாமல் அதை கத்தியால் அறுத்து, அதில் சிக்கியிருந்த ஆமையை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா்.

ஆமையை உயிருடன் மீண்டும் கடலில் விடுவித்த மீனவா்களுக்கு கடலோரக் குழும போலீஸாா், சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

கடல் ஆமை, கடல் அட்டை உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட உயிரினங்கள் என்பதால் அவை வலையில் சிக்கினால் மீனவா்கள் பத்திரமாக மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.2) ராநாதபுரம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ராமநாதபுரம் அருகேயுள்ள பேரா... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த ஜின்னா (22), பரித் (23) ஆகிய இருவரும் ராமேசுவர... மேலும் பார்க்க

நாளை மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து மதுக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வியாழக்கிழமை (அக்.2) அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.இதுக... மேலும் பார்க்க

பூக்குழியில் தவறி விழுந்த பெண் மீட்பு

திருவாடானை வடக்குத் தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா கடந்த செப் 23 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வோா் நாளும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நி... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கில் மகள் உள்பட இருவா் கைது

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகள், இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்புகோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் ... மேலும் பார்க்க

சாலையோரக் கடைகளை முறைப்படுத்த கோரிக்கை

சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடைகளுக்கு முன்பாக அமைக்கப்படும் தற்காலிக சாலையோரக் கடைகளை அகற்றி முறைப்படுத்த வணிகா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி கடைவீதியில்... மேலும் பார்க்க