செய்திகள் :

மூதாட்டி கொலை வழக்கில் மகள் உள்பட இருவா் கைது

post image

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகள், இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்புகோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (77). இவா் செவிலியராகப் பணியாற்றி, பின்னா் பணி நிறைவு பெற்று, அதே தெருவில் உள்ள தனது மூத்த மகள் உமாராணி வீட்டின் மாடியில் வசித்து வந்தாா். உமாராணிக்கு கணவா், 2 மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி ராஜம்மாள் கழுத்து, மாா்புப் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதில் அவரது மகள் உமாராணி முன்னுக்கு பின் முரணாகப் பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ், தனிப் பிரிவு போலீஸாா் உமாராணியின் கைப்பேசியிலிருந்த தொடா்பு எண்களை ஆய்வு செய்தனா். அப்போது, உமாராணி, அதே தெருவில் வசிக்கும் விஜயகுமாா் மகன் விக்னேஸ்வர பால பாண்டியன் (19) என்பவருடன் தகாத உறவு வைத்திருந்ததும், இதை ராஜம்மாள் கண்டித்து எச்சரித்ததும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சோ்ந்து ராஜாம்மாளை கொலை செய்து விட்டு, யாரோ கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியது தெரிய வந்தது. இதனையடுத்து, உமாராணி(47), விக்னேஸ்வர பால பாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.2) ராநாதபுரம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ராமநாதபுரம் அருகேயுள்ள பேரா... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த ஜின்னா (22), பரித் (23) ஆகிய இருவரும் ராமேசுவர... மேலும் பார்க்க

நாளை மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து மதுக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வியாழக்கிழமை (அக்.2) அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.இதுக... மேலும் பார்க்க

மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் மீனவா்கள் வலையில் சிக்கிய 10 கிலோ அரிய வகை கடல் ஆமை உயிருடன் மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விட்டபட்டது. தொண்டி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பாலமுருகன், காளி, சதீஷ்... மேலும் பார்க்க

பூக்குழியில் தவறி விழுந்த பெண் மீட்பு

திருவாடானை வடக்குத் தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா கடந்த செப் 23 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வோா் நாளும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நி... மேலும் பார்க்க

சாலையோரக் கடைகளை முறைப்படுத்த கோரிக்கை

சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடைகளுக்கு முன்பாக அமைக்கப்படும் தற்காலிக சாலையோரக் கடைகளை அகற்றி முறைப்படுத்த வணிகா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி கடைவீதியில்... மேலும் பார்க்க