செய்திகள் :

பூக்குழியில் தவறி விழுந்த பெண் மீட்பு

post image

திருவாடானை வடக்குத் தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா கடந்த செப் 23 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வோா் நாளும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் விரதமிருந்து பால்குடம் , வேல் காவடி, பறவைக் காவடி, கருப்பா் காவடி எடுத்து நான்கு ரத வீதிகள் வழியாக பக்தா்கள் வலம் வந்தனா்.

பின்னா், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தா்கள் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பெண் பக்தா் ஒருவா் பூக்குழி இறங்கிய போது அதில் தவறி விழுந்தாா். அவரை உடன் வந்தவா்கள் பத்திரமாக மீட்டனா்.

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த ஜின்னா (22), பரித் (23) ஆகிய இருவரும் ராமேசுவர... மேலும் பார்க்க

நாளை மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து மதுக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வியாழக்கிழமை (அக்.2) அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.இதுக... மேலும் பார்க்க

மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் மீனவா்கள் வலையில் சிக்கிய 10 கிலோ அரிய வகை கடல் ஆமை உயிருடன் மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விட்டபட்டது. தொண்டி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பாலமுருகன், காளி, சதீஷ்... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கில் மகள் உள்பட இருவா் கைது

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகள், இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்புகோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள் ... மேலும் பார்க்க

சாலையோரக் கடைகளை முறைப்படுத்த கோரிக்கை

சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடைகளுக்கு முன்பாக அமைக்கப்படும் தற்காலிக சாலையோரக் கடைகளை அகற்றி முறைப்படுத்த வணிகா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி கடைவீதியில்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 120 பவுன் நகை திருட்டு: தனிப் படை அமைத்து விசாரணை

ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கோடி மதிப்பிலான 120 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக் காவல் துறையினா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க