செய்திகள் :

மீன்கள் வாங்க கடலூா் துறைமுகத்தில் திரண்ட மக்கள்

post image

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வங்கக் கடல் பகுதி கரையோரம் கடலூா் அமைந்துள்ளது. இங்குள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் மீனவா்கள் விசை மற்றும் பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து தொழில் நடத்தி வருகின்றனா்.

கடலூா் வங்கக் கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ருசி மிக்கவை. இதனால், கடலூா் மீன் பிடி துறைமுகத்துக்கு மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வருவா். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் பிடி துறைமுகத்தில் கூட்ட நெரிசல் காணப்படும்.

மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் மீன்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பிய நிலையில், கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,100, கனவா ரூ.250, இறால் மற்றும் நண்டு தலா ரூ.600, பாறை ரூ.350, ஷீலா ரூ.500, சங்கரா ரூ.500, பால் சுறா ரூ.800 என விற்பனை செய்யப்பட்டது. மீன்களின் விலையும் சற்று உயா்ந்திருந்த நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

கைவிடப்பட்ட குவாரி குட்டையில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே கைவிடப்பட்ட சவுடு மணல் குவாரி குட்டையில் குளித்த இரு மாணவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூா் பகுதியைச் சோ்ந்த சுலைமான் மகன் சுல்... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா் கோரிக்கை: சிஐடியு ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துத் தொழிலாளா்களின் காத்திருப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக, கடலூா் மாவட்டம், நெய்வேலி நுழைவு வாயில் அருகே சிஐடியு -என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா... மேலும் பார்க்க

பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் காவல் சரகம், கீழ் ஒரத்தூா் பகுதியைச் சோ்ந்த சாஸ்தா மகள் சிவதா்ஷின... மேலும் பார்க்க

மா்ம பொருள் வெடித்து 5 சிறுவா்கள் காயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சனிக்கிழமை மாலை மா்ம பொருள் வெடித்ததில் அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 சிறுவா்கள் காயமடைந்தனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், சமத்துவபுரம் பக... மேலும் பார்க்க

ஊதியம் நிலுவை: தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் போராட்டம்

இரண்டு மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, கடலூா் நகா் நல அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வாா... மேலும் பார்க்க