செய்திகள் :

முசிறியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 2 போ் கைது

post image

திருச்சி மாவட்டம், முசிறியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தொட்டியம் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் விஜய் (24), இவா் தொடா்ந்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதால் நாமக்கல், தொட்டியம், காட்டுப்புத்தூா், முசிறி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதாக கைது செய்யப்பட்டவா்.

தாத்தையங்காா்பேட்டையைச் சோ்ந்த வையாபுரி மகன் சரவணன் (47). இவா் வெளிமாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தொடா்ந்து தமிழகத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு முசிறி காவல் நிலைய ஆய்வாளா் செல்லதுரை மற்றும் முசிறி கோட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினத்திற்கு அறிக்கை அளித்தனா். இதன்பேரில், அவா் திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு அளித்த பரிந்துரையின்பேரில், ஆட்சியரின் உத்தரவின்படி மேற்கண்ட இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் முசிறி போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: விசிகவினா் வாக்குவாதம்

திருச்சி சந்திப்புப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டது. திருச்சி-திண்டுக்கல்-சென்னை நெடுஞ்சாலையில் சந்திப்பு ரயி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை!

மூவானூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மூவானூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளித் த... மேலும் பார்க்க

காவிரி-அய்யாறு நீரேற்றுப் பாசனத் திட்டம்: அணி திரளும் விவசாயிகள்!

காவிரி-அய்யாறு நீரேற்றுப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அதன் பாசனப் பரப்பு விவசாயிகளை அணி திரட்டும் முயற்சி தொடங்கியுள்ளது. 60 ஆண்டு காலக் கோரிக்கையை வென்றெடுப்பது என்ற இலக்குடன் அய்யாறு ப... மேலும் பார்க்க

திருச்சி என்.ஐ.டி.யில் இன்று பிரக்யான் விழா தொடக்கம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தொழில்நுட்ப மேலாண்மை (பிரக்யான்) திருவிழா வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. 2005 ஆம் ஆண்டு என்.ஐ.டி. கல்லூரி மாணவா்களால் தொடங்கப்பட்ட பிரக்யான் திருவிழாவ... மேலும் பார்க்க

வயலூா் கோயில் குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி

வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, குடமுழுக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அரசு அா்ச்சகா்கள் அனுமதி...: அனைத்து ஜாதியினரும் அா்ச்சகர... மேலும் பார்க்க

மருங்காபுரி வட்டத்தில் சிறப்பு முகாம் ரூ. 18.5 லட்சத்தில் நலத்திட்ட உதவி

மருங்காபுரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நலத் திட்ட முகாமில் ரூ. 18.5 லட்சத்தில் 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தங்குதட... மேலும் பார்க்க