செய்திகள் :

முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!

post image

மும்பை: வங்கி, ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து, இரண்டு நாள் ஏற்ற - இறக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சரிந்து முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,054.75 புள்ளிகள் அதாவது 1.28 சதவிகிதம் சரிந்து 81,121.70 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் நிலையற்ற அமர்வில், 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 624.82 புள்ளிகள் சரிந்து 81,551.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 174.95 புள்ளிகள் சரிந்து 24,826.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை மற்றும் உற்பத்தி உற்பத்தி தரவு நாளை வெளியிடப்படவுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்த நிலையில், இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ள முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்கள் குறித்தும் நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.

சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமென்ட் அதிகபட்சமாக 2.21 சதவிகிதம் சரிந்ததும், அதனை தொடர்ந்து ஐடிசி 2.01 சதவிகிதம் சரிந்தது. டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, எச்சிஎல் டெக், மஹிந்திரா & மஹிந்திரா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எடர்னல் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், நெஸ்லே மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் பலவீனம் காரணமாக முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தில் லாப முன்பதிவைத் மேற்கொண்டதால் உள்நாட்டில் பங்குச் சந்தை சரிந்து முடிந்தன. அதே வேளையில் சிறு மற்றும் நடுத்தர பங்குகள் ஒப்பீட்டளவில் மீள்தன்மையுடன் வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்த நிலையில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையில், நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டிருந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.135.98 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.51 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 65.07 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: 8.1% வளர்ச்சியுடன் முன்னிலை வகிக்கும் இந்திய கணினி சந்தை!

செயில் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 11 சதவிகிதம் உயர்வு!

புது தில்லி: அரசு பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் - (செயில்), மார்ச் உடன் உள்ள காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்து ரூ.1,250.98 க... மேலும் பார்க்க

டிவிட்டருக்குச் சென்றவரை ரூ. 853 கோடி கொடுத்து வேலையில் தக்கவைத்துக்கொண்ட கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் பணியில் இருந்து டிவிட்டருக்கு (எக்ஸ்) மாற முயன்றவரை ரூ. 853 கோடி கொடுத்து (100 மில்லியன் டாலர்) வேலையில் தக்கவைத்துள்ளது கூகுள் நிறுவனம். இவ்வளவு தொகையைக் கொடுத்து வேலையில் தக்க வை... மேலும் பார்க்க

பாட்டா இந்தியாவின் 4-வது காலாண்டு லாபம் 36% சரிவு!

புதுதில்லி: காலணி உற்பத்தி நிறுவனமான பாட்டா இந்தியா தனது இயக்க லாபம் 36 சதவிகிதம் குறைந்து ரூ.37 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.2023-24 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனமானத... மேலும் பார்க்க

கிரானுல்ஸ் இந்தியாவின் 4-வது காலாண்டு நிகர லாபம் 17% ஆக உயர்வு!

புது தில்லி: மருந்து நிறுவனமான கிரானுல்ஸ் இந்தியா, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 17% அதிகரித்து ரூ.152 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.ஹைதர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று சமமாக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு காரணமாக இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சமமாக முடிந்தது.ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி எ... மேலும் பார்க்க

மிகவும் தட்டையாக வெளியாகும் ஐபோன் 17! இந்தியாவில் விலை எவ்வளவு?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளன. இதையொட்டி ஐபோன் 17 வரிசையில் உள்ள ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார... மேலும் பார்க்க