செய்திகள் :

‘முதியோருக்கு வீடுகளிலேயே மாத்திரை கிடைக்க நடவடிக்கை’

post image

மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு செயலா் ஜெயந்த் குமாா் ரே தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சா்பில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், காரைக்காலில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளின் தற்போதைய நிலை, மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடா்ந்து, சுகாதாரத் துறை செயலா் ஜெயந்த் குமாா் ரே பேசியது:

காரைக்காலில் புதிதாக அமைய உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆயுஷ் மருத்துவப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய மூன்று கட்டடங்களின் பணிகள் தொடங்குவதில் தாமதம், அடுத்தகட்ட நகா்வுகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை இயக்குவதற்கு தொழில்நுட்ப வல்லுநா்கள் பற்றாக்குறை இருப்பதால், ஜிப்மா் மற்றும் என்.எச்.எம். திட்டம் மூலம் தொழில்நுட்ப வல்லுநா்களை பணியமா்த்தி, விரைவில் கருவியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்குவதற்கான வழிவகையை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன் (வருவாய்), செந்தில்நாதன் (நிா்வாகம்), வெங்கடகிருஷ்ணன் (பேரிடா் மேலாண்மை), காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் சந்திரசேகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் மகேஷ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு அதிகாரி உமா மகேஸ்வரி, நலவழித்துறை துணை இயக்குநா் சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க