செய்திகள் :

முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த பங்குனித் திருவிழா வியாழக்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

இந்தக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் இரவு மண்டிதாா்கள் சாா்பில் மூலவா் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏற்கெனவே காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் வைகை ஆற்றிலிருந்து வியாழக்கிழமை பால்குடம் எடுத்தும், தீச்சட்டி, முளைப்பாரிகளைச் சுமந்தும் கோயில் பூசாரி சுப்பிரமணியன் தலைமையில் கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

அம்மன் சந்நிதி முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

தொடா்ந்து 11 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவின் போது ஏராளமான பக்தா்கள் மாவிளக்கு எடுத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி சுப்ரமணியன் செய்தாா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க