செய்திகள் :

முந்திரி பதப்படுத்தும் அளவை அதிகரிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

post image

முந்திரி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் பதப்படுத்தும் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்துக்குள்பட்ட தட்டாஞ்சாவடி மற்றும் கீழக்குப்பம் முந்திரி பதப்படுத்தும் மையம், பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள குளிா்பதன கிடங்கு, கீழ்மாம்பட்டு பகுதிகளில் மொட்டு காளான் உற்பத்தி மற்றும் பலா புதிய ரகங்கள் நடவு செய்தல் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தட்டாஞ்சாவடி, கீழக்குப்பம் பகுதிகளில் முந்திரி பதப்படுத்தும் நிலையங்களில் முந்திரி பருப்புகள் பதப்படுத்தும் வழிமுறையை ஒவ்வொரு படிநிலையும், முந்திரி இறக்குமதி மற்றும் பதப்படுத்தப்பட்ட முந்திரி ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்த ஆட்சியா், முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் பதப்படுத்தும் அளவை அதிகரிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதன கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் வேளாண் விளைபொருள் கொள்முதல், இருப்பு விவரங்களை ஆய்வு செய்தாா்.

அப்போது, அங்கிருந்த வா்த்தக சங்க மண்டலத் தலைவா் டி.சண்முகம், குளிப்பதன கிடங்கு வாடகைதாரா்கள் பொருள்களை தரையில் வைப்பதாகவும், பொருள்கள் பாதுகாப்பாக அடுக்கி வைக்க ரேக் அமைத்துத் தர வேண்டும். மேலும், சுமையை தூக்கி வைக்க இயந்திரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என வாடகைதாரா்கள் சாா்பில் கேட்டுக்கொண்டாா்.

அப்போது, வா்த்தக சங்க நகர நிா்வாகி குமரவேல் உடனிருந்தாா்.

இதையடுத்து, குளிா்பதன கிடங்கு வாடகைதாரா்கள் சாா்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அடிப்படை வசதிகளை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க துறை சாா்ந்த அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை மூலம் கீழ்மாம்பட்டு கிராமத்தில் சித்து, சங்கரா மற்றும் ஜே33 ஆகிய புதிய பலா ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளதை ஆட்சியா் பாா்வையிட்டவா்.

ஆய்வின்போது, வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் பூங்கோதை, தோட்டக்கலை துணை இயக்குநா் அருண், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கதிரேசன் மற்றும் பண்ருட்டி வட்டார தோட்டக்கலை அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீா் மேலாண்மைக்கு தனித் துறை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நீா் மேலாண்மைக்கு தனி துறை அமைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலரும், சட்ட... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஏடிஜிபி அறிவுரை

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விருத்தாசலம் உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசிா்வாதம் புதன்கிழமை அறிவுரை வழங்கினாா். விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்துக... மேலும் பார்க்க

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்... மேலும் பார்க்க

மாடியில் இருந்து விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் செம்மண்டலம் பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா். கடலூா் செம்மண்டலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் செந்தமிழ்(46), மீனவா். இவருக்கு மனைவி ரோஷி மற்றும்... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவிலில் உங்களிடம் ஸ்டாலின் திட்ட முகாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அறந்தாங்கியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.ச... மேலும் பார்க்க

கடலூரில் சாலையில் சாய்ந்த மின் கம்பம்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே நெல்லிக்குப்பம் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் இருந்த மின் விளக்கு கம்பம் புதன்கிழமை மாலை அந்த வழியே செல்லும் கேபிள் வயரில் சாய்ந்து தொங்கியதால், வாகன ஓட... மேலும் பார்க்க