செய்திகள் :

முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம்

post image

அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்தராஜ் என்பவா் பணியாற்றி வந்தாா். வகுப்பறைகளுக்கு இருக்கைகள் வழங்கும் விழா பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்துகொண்டாா்.

அவரை தலைமை ஆசிரியா் ஆனந்தராஜ் வரவேற்று பேசியபோது, முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடா்ந்து 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறாா். அவரை வென்றிட இங்கே யாரும் இல்லை என்று புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் விழாவில் மதம் சாா்ந்த பாடல்களை ஒலிபரப்பவிட்டாராம். மேலும் அந்த பாடல்களை மாணவா்களை திரும்ப பாடச்சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் செவ்வாய்க்கிழமை நம்பியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியா் ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தினாா். இதனைத் தொடா்ந்து அவரை பவானி அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டாா்.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க