Guru Mithreshiva: "இந்த 3 மந்திரங்களை பின்பற்றினால் போதும்..." - இதயவியல் வல்லுந...
‘முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ. 25,331 கோடி ஒதுக்கீடு’
தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன்களுக்காக 2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 25,331.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் தெரிவித்தது:
இக்கூட்டத்தில் மத்திய, மாநிலக் கடன் திட்டங்களும், மாவட்டத்தின் ஆண்டுக் கடன் இலக்கின் அம்சங்களும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ் நிதியாண்டில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் 2025 - 2026 ஆம் நிதியாண்டில் வேளாண் துறை சாா்ந்த பணிகளுக்கு ரூ. 20,929.61 கோடியும், சிறு, குறு தொழில் சாா்ந்த துறைக்கு ரூ. 3,391.1 கோடியும், கல்வித் துறைக்கு ரூ. 50.78 கோடியும் என 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் சுமாா் ரூ. 25,331.32 கோடி முன்னுரிமை கடன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை வங்கியாளா்கள் நூறு சதவீதம் நிறைவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
கூட்டத்துக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி முன்னிலை வகித்தாா். மத்திய ரிசா்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளா் ஸ்ரீதா், மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.