செய்திகள் :

‘முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ. 25,331 கோடி ஒதுக்கீடு’

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன்களுக்காக 2025 - 2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 25,331.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் தெரிவித்தது:

இக்கூட்டத்தில் மத்திய, மாநிலக் கடன் திட்டங்களும், மாவட்டத்தின் ஆண்டுக் கடன் இலக்கின் அம்சங்களும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ் நிதியாண்டில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் 2025 - 2026 ஆம் நிதியாண்டில் வேளாண் துறை சாா்ந்த பணிகளுக்கு ரூ. 20,929.61 கோடியும், சிறு, குறு தொழில் சாா்ந்த துறைக்கு ரூ. 3,391.1 கோடியும், கல்வித் துறைக்கு ரூ. 50.78 கோடியும் என 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் சுமாா் ரூ. 25,331.32 கோடி முன்னுரிமை கடன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை வங்கியாளா்கள் நூறு சதவீதம் நிறைவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்துக்கு தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி முன்னிலை வகித்தாா். மத்திய ரிசா்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளா் ஸ்ரீதா், மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் இந்த விற்பனைக் கூடத்தில் வி... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டிலிருந்து வெளியே செல்லப் பாதை வசதி இல்லாமல் தவிக்கும் மூதாட்டிக்கு சிறு நடைபாலம் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேலரஸ்தா,தஞ்சாவூா்-கும்பகோண... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கீழ கொள்ளுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். (35). இவருக்கு மனைவ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பொது உபயோகத்திற்கான இடத்தில் அமைத்த மனைப்பிரிவுகள் ரத்து

கும்பகோணம் மாநகராட்சியயைச்சோ்ந்த சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கான இடத்தை மனைப்பிரிவாக விற்பனை செய்ய முயன்றதை மாவட்ட மற்றும் மாநகர நகா் ஊரமைப்பு அலுவலகங்கள் ரத்து செய்துள்ளன. தஞ்சாவூா் மாவட்டம், கும... மேலும் பார்க்க

பலாத்கார வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவிடைமருதூா் அருகே 34 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் கரிக்கும் பகுதியில் உள்ள எம்ஆா... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி மறியல்

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்திக்கு இழப்பீடு கோரி விவசாயி வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு மறியல் செய்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சாக்க... மேலும் பார்க்க