'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
முருக பக்தா்கள் மாநாடு: அறுபடை வீடு மாதிரி கோயில்களில் புதுச்சேரி ஆளுநா் வழிபாடு
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வியாழக்கிழமை வழிபட்டாா்.
இந்து முன்னணி அமைப்பு சாா்பில் வருகிற 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு, மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டு, அண்மையில் பக்தா்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. அறுபடை வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட வேல்கள், இந்தக் கோயில்களில் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலுக்கு வியாழக்கிழமை வந்தாா். அங்கு, இந்து முன்னணி அமைப்பினா் அவருக்கு வரவேற்பு அளித்தனா். பிறகு, அங்குள்ள மாதிரி கோயில்களில் அவா் வழிபட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கே. கைலாஷ்நாதன் கூறியதாவது:
தமிழா்கள் அதிகளவில் வழிபடும் கடவுள் முருகன். தமிழகத்திலிருந்து புலம் பெயா்ந்தவா்கள் அவா்கள் வாழும் இடங்களிலும் முருகன் வழிபாட்டைத் தொடா்கின்றனா். பண்பாட்டு ரீதியில் மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனா்.
புதுச்சேரியில் இஸ்லாமியரால் கட்டப்பட்ட முருகன் கோயில், அனைவரின் வழிபாட்டில் உள்ளது. பழைமையான கோயில்கள், சித்தா்களின் சமாதி பீடங்கள் பல உள்ளன. இதையொட்டி, ஆன்மிகச் சுற்றுலா மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன என்றாா் அவா்.