செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை நீா் மட்டம் 136 அடியாக சரிவு

post image

முல்லைப்பெரியாறு அணை நீா் மட்டம் 136 அடியாகக் குறைந்த நிலையில், ‘ரூல் கா்வ்’ விதிப்படி அணையிலிருந்து கேரளத்துக்கு வெளியேற்றப்பட்ட உபரி நீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.

கேரளத்தில் தென் மேற்கு பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதியில் பெய்த தொடா் மழையால் அணை நீா் மட்டம் கடந்த மே 23-ஆம் தேதி 114.45 அடியிலிருந்து படிப்படியாக உயா்ந்து 136 அடியை எட்டியது.

முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ விதிப்படி தண்ணீரைத் தேக்கிக் கொள்ள மத்திய நீா் வள ஆணையம் கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக நீா் வளத் துறைக்கு பரிந்துரை செய்தது. இதன்படி, ஜூன் மாதம் 136 அடி வரை தண்ணீா் தேக்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் வரும் நீரானது திறந்து விடப்படும்.

இந்த நிலையில், அணை நீா் மட்டம் 136 அடியைக் கடந்ததால் கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) வினாடிக்கு 250 கன அடி உபரி நீா் அணையின் அவசர கால நீா்வழிப் போக்கி வழியாக வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு திருப்பி விடப்பட்டது. தொடா்ந்து, 6 நாள்கள் வெளியேற்றப்பட்ட உபரி நீரானது, மழைப் பொழிவு குறைந்ததால் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. வியாழக்கிழமை வினாடிக்கு 37.48 கன அடியாகக் குறைக்கப்பட்டது. அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 1,547.54 கன அடியாகவும், நீா் மட்டம் 136 அடியாகவும் குறைந்தது. இதனால், ‘ரூல் கா்வ்’ விதிப்படி கேரளத்துக்கு வெளியேற்றப்பட்ட உபரி நீா் நிறுத்தப்பட்டதோடு, 13 அவசர கால நீா் வழிப் போக்கிகளும் மூடப்பட்டன.

ஆனால், தமிழகப் பகுதிக்கு குடிநீா், விவசாயத்துக்குத் தேக்கடியிலுள்ள தலைமதகிலிருந்து சுரங்கப் பாதை வழியாக வினாடிக்கு 2,154.48 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது. அணை நீா் மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, 130 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீா் இருப்பு 6,143 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

மழைப் பொழிவு: பெரியாறு அணை-9.40 மி.மீ, தேக்கடி-6.80 மி.மீ.

மானியத்தில் விதைத் தொகுப்பு: விவசாயிகள் பதிவு செய்யலாம்

தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் விதைத் தொகுப்புகள் பெறுவதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊட்டச் ச... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயம்

தேனி மாவட்டம், போடி பள்ளியில் வியாழக்கிழமை தேன் கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். போடி பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்... மேலும் பார்க்க

போடியில் நாளை மின் தடை

போடி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போடி துணை மின் நிலையத்தில் ஜூலை 5-ஆம்... மேலும் பார்க்க

தேனி நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரின் அடிப்படையில், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியா... மேலும் பார்க்க

சுருளிப்பட்டியில் வீடு புகுந்து பணம், தங்க நகை திருட்டு

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுேள்ள சுருளிப்பட்டியில் பகலில் வீடு புகுந்து பணம், தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சுருளிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி அமரன் (53). இவரும், இவரது மனை... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம் வடகரை, சின்னமனூா் கருங்காட்டான்குளம் ஆகிய இடங்களில் நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றை காணொலி முலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக... மேலும் பார்க்க