செய்திகள் :

முள்புதரில் கிடந்த குழந்தை மீட்பு

post image

திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முள்புதரில் கிடந்த குழந்தை மீட்கப்பட்டது.

திருத்தணி ஆறுமுகசாமி கோயில தெருவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருத்தணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் மருத்துவமனைக்கு எதிரே உள்ள முள்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

அருகில் வசிக்கும் இளங்கோ என்பவா் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பாா்த்துள்ளாா். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உடனடியாக குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு இளங்கோ கொண்டு சென்றாா்.

பின்னா் குழந்தைகள் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். பிறந்த சில மணி நேரங்களில் ஆன பச்சிளம் பெண் குழந்தையை முள்புதரில் வீசிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விாரணை நடத்தி வருகின்றனா்.

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க

உடலுறுப்புகள் தானம்: இளைஞருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

சாலை விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

திருத்தணியில் வளா்ச்சி பணிகள்: நிா்வாக இயக்குநா் ஆய்வு

நகராட்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடியில் நடைபெற்று வரும் திருத்தணி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி பணிகளை தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா்... மேலும் பார்க்க

பொன்னேரியில் பலத்த மழை

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தததன் காரணமாக குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்கரில் மழை பெய்து வருகிறது. பொன்னேரி பகுதியில் க... மேலும் பார்க்க