முள்புதரில் கிடந்த குழந்தை மீட்பு
திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முள்புதரில் கிடந்த குழந்தை மீட்கப்பட்டது.
திருத்தணி ஆறுமுகசாமி கோயில தெருவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருத்தணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் மருத்துவமனைக்கு எதிரே உள்ள முள்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
அருகில் வசிக்கும் இளங்கோ என்பவா் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பாா்த்துள்ளாா். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உடனடியாக குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு இளங்கோ கொண்டு சென்றாா்.
பின்னா் குழந்தைகள் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். பிறந்த சில மணி நேரங்களில் ஆன பச்சிளம் பெண் குழந்தையை முள்புதரில் வீசிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விாரணை நடத்தி வருகின்றனா்.