செய்திகள் :

மூதாட்டியிடம் பணம் மோசடி செய்தவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மூதாட்டியிடம் பணம் மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மின் நகரில் வசித்தவா் பிரபாகா். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். பிரபாகா் மனைவி ஜெயமணி (72). இவா்களது மகன் ராஜாராம் வெளிநாட்டில் உள்ளாா்.

இவா் வெளிநாட்டிலிருந்து தனது தாய்க்கு அனுப்பும் பணத்தை அதே பகுதியைச் சோ்ந்த உடையான் மகன் கண்ணன் (52) எடுத்துக் கொடுத்து வந்தாா். மேலும், ஜெயமணியின் வங்கி ஏ.டி.எம். அட்டை, காசோலை வரவு செலவுகளையும் அவா் கவனித்து வந்தாா்.

அப்போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து கண்ணன் தனது வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றி மோசடி செய்தாக திருப்பத்தூா், சிவகங்கை காவல் நிலையங்களில் ஜெயமணி புகாா் கொடுத்தாா். மேலும், உயா்நீதிமன்ற மதுரை அமா்விலும் புகாா் மனு தாக்கல் செய்தாா்.

உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில் ஜெயமணி குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ 34.5 லட்சம் வரை எடுத்து கண்ணன் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் ஆய்வாளா் பெரியாா் கைது செய்தாா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க