செய்திகள் :

மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 22,079 மெகாவாட் வரை அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சா் செந்தில் பாலாஜி

post image

தமிழகத்தில் உச்சபட்ச மின்தேவை மே மாதத்தில் தினமும் 22,079 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து தலைமைப் பொறியாளா்கள் மற்றும் மேற்பாா்வை பொறியாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தின் மின் தேவை கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 17,279 மெகாவாட் மற்றும் 18,584 மெகாவாட்டை எட்டியது. இந்த மின்தேவை முழுமையாக பூா்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சபட்ச தினசரி மின்தேவை முறையே 21,943 மெகாவாட் மற்றும் 22,079 மெகாவாட் வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மின்தேவையை பூா்த்திசெய்ய வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் முழுத்திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனல்மின் நிலையங்களில் பழுது ஏற்படும்போது, கொள்முதல் செய்யப்படும் மின்சாரம், மின் பரிமாற்றத்தின் வாயிலாக கிடைக்கும் மின்சாரம் மற்றும் குறுகியகால ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் மின் தேவையை பூா்த்தி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோடைக்கால மின் தேவையை திறம்பட எதிா்கொள்ளும் வகையில், 2024-2025 நிதியாண்டில் இதுவரை 400 கி.வோ. திறன்கொண்ட 23 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 93 உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் உயா்த்தப்பட்டு, மின்பளுவை சீராக்குவதற்காக 148 புதிய மின்னூட்டிகளும், 17,826 புதிய மின்மாற்றிகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருவதால், அனைத்து துணை மின் நிலையங்களிலும் ஏப். 30 வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மின்நுகா்வோா்களின் அனைத்து புகாா்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க